உலக நாட்டிய தினத்தை (International Dance Day) அன்று ஏப்ரல்’ 29 கொண்டாடப்படுவதை முன்னிட்டு. மண்டல கலை பண்பாட்டு மையங்கள், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக செவ்வியல் மற்றும் கிராமிய நடனங்கள் சார்ந்த நாட்டிய நிகழ்ச்சிகள், போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நாட்டியம் தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சிகள். பயிற்சி பட்டறைகள், கருத்தரங்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
உலக இசை தினம் (World Music Day) ஜீன் 21 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு. நான்கு அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் வாயிலாக இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசைப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. யுனஸ்கோ, படைப்பாற்றல் மிக்க இசை நகரமாக சென்னை மாநகரை அறிவித்ததை முன்னிட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பாக ஆண்டு தோறும் சென்னையில் இசை விழா நடத்தப்படுகின்றன.
உலக நாடக தினம் ( World Theatre Day) மார்ச் 27 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு. மறைந்து வரும் நாடகக் கலைக்கு மறுமலர்ச்சி அளிக்கும் வகையில் மண்டலக் கலை பண்பாட்டு மையங்கள் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் புராண, இதிகாச, தமிழ் காப்பியங்கள், இலக்கியம், வரலாறு, சமுக, நாட்டுப்புற, மௌன மற்றும் இசை நாடகங்களை மேடையேற்றம் செய்யப்படுகின்றன.
உலக ஓவியத்தினம் (World Art Day) ஏப்ரல் 15 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு. சிறார்களிடையே படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில். ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக கலைக்காட்சிகள். கலைப் பயிற்சி முகாம்கள். கலைப் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றத்தின் சிறார்களிடையே கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில். குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய கலைப் பிரிவுகளில் 5-8, 9-12, 13-16 வயது பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது, 9-12, 13-16 வயது பிரிவுகளில் முதலிடம் பெற்ற சிறார்களுக்கிடையில் மாநிலக் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு. அதில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.10,000/-, ரூ.7,500, ரூ. 5,000 பரிசாக அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் குளிர்காலம் மற்றும் கோடைக்கால விடுமுறைகளில் மாநில அளவிலான கலைப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாமில் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம், கைவினை ஆகிய பிரிவுகளில் கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் காலாண்டு விடுமுறைகளில் 10 நாட்கள் மாநில அளவிலான கைவினை கலைப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாம்களில் தமிழகத்தில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 100 மாணவர்கள் பங்கு பெறுவார்கள். ஓவியம், கைவினை, மண்ணிலான கலைப் பொருட்கள் செய்தல், பொம்மை செய்தல், துணி ஓவியம் உள்ளிட்ட கலைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.